கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர் அவர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

ஒரு சமயம்
கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர் அவர்கள்
மாநாடு ஒன்றில் பேசினார்.
  
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர்
*தற்பெரு“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ
*பொறா“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலரோ
*பழ“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“*யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
    “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில

*“மை“கள்*
உள்ளன.
இவை என்ன தெரியுமா?
*கய“மை“*,
*பொய்“மை“*,
*மட“மை“*,
*வேற்று“மை“*
ஆகியவைதாம்.
கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?
*நன்“மை“*
தரக்கூடிய
*நேர்“மை“*,
*புது“மை“*,
*செம்“மை“*,
*உண்“மை“*.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?
*வறு“மை“*,
*ஏழ்“மை“*,
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே.
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“*
யாகவும்,
*உரி“மை“யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

படித்த தில்
பிடித்ததைப் பகிர்ந்தேன்.
*MY*
Opinion to all
இந்த அரு *மை* யான
நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பளாமே !

No comments:

Post a Comment